August 2026
இயேசு கிறிஸ்துவின் வல்லமையான பெயரில் வாழ்த்துக்கள்!
இந்த மாதத்தில், கிறிஸ்துவின் மறுரூபமான நிகழ்வினைக் குறித்து தியானிக்கின்றோம். இயேசு தன்னுடன் பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் உயர்ந்த மலையின் மேல்கூட்டிச் சென்று, அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார் என வேதத்தில் வாசிக்கின்றோம்.
இயேசுவை பின் தொடரும் சீடர்களின் வாழ்விலும் மறுரூபமாகுதல் அவசியமாகிறது. தேவனுடைய நன்மையும், பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே, மறுரூபமாகுங்கள் என்று ரோமருக்கு எழுதின நிருபத்தில் பவுல் குறிப்பிடுகின்றார். (ரோமர் 12:2)
அதுமட்டுமல்லாமல், பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில், இவ்வாறாக மறுரூபமடைதலைக் குறித்து கூறுகிறார்: அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக் கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.’ (பிலிப்பியர் 3:21) எனவே அந்த மகிமையான மறுரூபமாகும் நாளினை ஆவலோடு எதிர் நோக்கி காத்திருப்போமாக!
அப்போஸ்தலர் 12-ஆம் அதிகாரம் 3-ஆம் வசனம் முதல் 17-ஆம் வசனம் வரையுள்ள பகுதியில் காவலில் வைக்கப்பட்டிருந்த பேதுரு அற்புதமாக விடுதலையானதை வாசிக்க பார்க்கிறோம்.
இவ்வாறு பேதுரு விடுதலையானதை ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் ௧-ஆம் தேதி அன்று அகில உலக திருச்சபையும் நினைவு கூர்ந்து தேவனை துதிக்கின்றது.
இன்று பேதுருவைப் போல, சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, சேவகர் நடுவே காவலில் இருப்போரையும், தேவன் தமது தூதரை அனுப்பி விடுதலை செய்ய வல்லமை உள்ளவராய் இருக்கிறார்.
கைகளிலில் இருந்து சங்கிலிகள் விழவும், பூட்டப்பட்ட கதவுகள் தானாய் திறக்கவும் தேவன் உதவி செய்தார்.
எதற்காக? சுவிசேஷத்தை பிரசங்கம் செய்வதற்காகத்தான். இன்று நாம் சுவிசேஷத்தை பிரசங்கிக்கக் கூடாதபடிக்கு கட்டப்பட்டு இருப்போம் என்றால்,
தேவன் பேதுருவை விடுதலை செய்தது போல நம்மையும் விடுதலை செய்வாராக!
