கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!
இந்த மாதத்தில், 6-ஆம் தேதி அன்று அப்போஸ்தலனும், சுவிசேஷகனுமாகிய யோவானின் திருநாளை கொண்டாட இருக்கிறோம்.
இயேசுவின் அன்பான சீடனும், அவர் மார்பினில் எப்போதும் சாய்ந்து கொண்டிருந்தவனுமாகிய யோவானின் அன்பு நமக்கு முன்மாதிரியாய் இருக்கட்டும். அவரைப் போல நாமும் இயேசுவை நேசிக்க, அவர் மார்பினில் எப்போதும் சாய்ந்திருக்க தேவன் நமக்கு உதவி செய்வாராக!
மேலும் வருகின்ற 14-ஆம் தேதி, இயேசுவின் பரமேறிய திருநாளினை ஆசரிக்க இருக்கிறோம்.
நமக்காய் இவ்வுலகில் வந்து, பாடுபட்டு மரித்து உயிரோடு எழுந்த கிறிஸ்து, பின்னர் அநேகருக்கு தம்மை உயிரோடு உள்ளவராக காட்சியளித்து, பின்னர் தமது சீடர்கள் மத்தியில் இருந்து பரமேறி சென்றார்.
அவர் எப்படி சென்றாரோ, அப்படியே திரும்ப வர இருக்கின்றார். நாம் அவரது வருகையை சந்திக்க ஆயத்தமா? ஆயத்தமாகுவோம்! பிறரை ஆயத்தப்படுத்துவோம்!
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
