கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,
லெந்து காலமானது இயேசு கிறிஸ்து நாற்பது நாள் உபவாசம் இருந்ததை குறிக்கின்றது. இயேசு அதன் பின்னர் ஞானஸ்நானம் பெற்று தனது ஊழியத்தினை துவக்கினார். நாமும் இந்த லெந்து காலத்தினை நிறைவு செய்வதுடன், இயேசுவைப் போல ஆவியானவரின் துணையுடன் தேவனுக்கென செய்யும் ஊழியங்களை இன்னும் உற்சாகமாக செய்வோமாக!
வருகின்ற 2-ஆம் தேதி அன்று பெரிய வியாழன் ஆராதனையை ஆசரிக்க இருக்கிறோம். இயேசு தனது மாம்சம் மற்றும் இரத்தத்தின் மூலம் உலகத்திற்கு புதிய உடன்படிக்கையை கொடுத்ததை நினைவுகூர்கிறோம். திருவிருந்தின் மூலம் நாம் பெறும் ஆசீர்வாதங்களை உலகத்தினர் அனைவரும் பெற்றிட ஜெபிப்போம், உழைப்போம்!
வருகின்ற 3-ஆம் தேதி அன்று பெரிய வெள்ளி ஆராதனையை ஆசரிக்க இருக்கிறோம். அன்று இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வாக்கியங்களை தியானிக்க இருக்கிறோம். அன்று சிலுவையில் இயேசு பட்ட பாடுகளும், அவர் சந்தித்த மரணமும், நமக்காக மட்டுமல்ல, மொத்த உலக மக்களின் இரட்சிப்புக்காக என்ற சிந்தையுடன் அன்றைய ஆராதனையை ஆசரிப்போமாக!
இந்த மாதத்தின் 5-ஆம் தேதி அன்று இயேசுவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடுகிறோம்! ஈஸ்டர் தினம் என்பது லெந்து காலம் நிறைவு பெறுவதையும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் குறிப்பிடுகிறது.
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் பின்னர், பயந்து கொண்டிருந்த சீடர்கள் ஆவியானவரின் பலத்துடன் தைரியமாய் இயேசுவுக்கு சாட்சிகளாய் செயல்பட்டனர். நாமும் அதுபோல இயேசுவின் உயிர்த்தெழுதலின் வல்லமையை பெற்றவர்களாய், தேவ சித்தத்தை நிறைவேற்ற பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு நம்மை அர்ப்பணிப்போம்!
அன்பான திருச்சபையினர் அனைவருக்கும், உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால், ஈஸ்டர் தின சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
இறைமைந்தன் இயேசுவின் இறைசேவையில்,
அருள்திரு. ஜான் ஸ்டீஃபன்
சபை போதகர்,
தூய மத்தேயு தமிழ் ஆலயம்
